உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளை முதல் மண்ணெண்ணெயின் விலை குறைப்பு…



நாளை(11) முதல் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவிருப்தாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

மீன்பிடி சமூகம் உட்பட குறைந்த வருமானம் பெறுவோர் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு மண்ணெண்ணெயின் விலையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெத-ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் மங்கள சமரவீர உட்பட திறைசேரியின் உயர் மட்ட அதிகாரிகளுடன் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்படி ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 25 முதல் 30 ரூபா வரையான தொகையால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் மூதூர் இளைஞர்கள் சந்திப்பு…

wpengine

லசந்த கொலை – தீவிர விசாரணைகள் ஆரம்பம்

wpengine

மருத்துவ பரிசோதணைகள் ஆரம்பம்

wpengine