உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நான் தோல்வியடைந்ததாக உணர்கிறேன்! ரணில் விக்ரமசிங்க



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அதிகாரத்தை கொடுத்தபோது ஓடியவர்கள், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றபோதும் ஓடுகிறார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், நாடாளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் குறித்து இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

ஒளிந்துக்கொண்டும், ஓடிக்கொண்டும் வேலை செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மால், பயிற்றப்பட்டவர்கள், அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது எவ்வாறு என்பதை தெரியாமல் இருப்பதை கண்டு தாம் கவலைப்படுவதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, அந்த விடயத்தில் தாம் தோல்வி கண்டுவிட்டதாகவே உணர்வதாக தெரிவித்துள்ளார்.

 

Related posts

எஸ்ட்ரா செனகா : இன்று மாலை வருகிறது

wpengine

மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி மூவர் பலி

wpengine

தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு காயம்

wpengine