Top Story 2உள்நாட்டு செய்திகள்

நான்கு இணையத்தளங்களுக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிசை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியொருவரை விற்பனைக்காக விளம்பரப்படுத்திய 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம், தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேற்படி இணையத்தளங்களுக்கு தடைவிதிக்குமாறு, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது போன்ற இணையத்தளங்களுக்கு தகவல்களை பதிவேற்றுதல் மற்றும் பரிமாற்றுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Related posts

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம்…

wpengine

தேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது…

wpengine