உள்நாட்டு செய்திகள்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை எதிர்வரும் 13 அன்று மாறுபடும் – வளிமண்டலவியல் திணைக்களம்.


நாடெங்கிலும் நிலவும் வறட்சியான காலநிலையில், எதிர்வரும் 13ம் திகதி முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வளிமண்டல நிலைமை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் தெற்கின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான காலநிலை தொடரும் என்றும் மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்று…

wpengine

இயல்புநிலை தொடர்பில் விஷேட நடைமுறை

wpengine

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு…

wpengine