Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு நோய்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இது 48 சதவீதமாகும் என்றும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

குமார வெல்கம மற்றும் சந்திரசேன நீக்கம்

wpengine

அனைத்து வீர வீராங்கனைகளிடமும் ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சோதனை..

wpengine

மின்சக்தி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

wpengine