உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை



(FASTNEWS|COLOMBO) – மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

wpengine

உமா ஓயா வேலைத்திட்டம் பற்றிய அறிக்கை இன்று அமைச்சரவையில்…

wpengine

ஊரடங்கு மேலும் நீடிக்க மாட்டாது

wpengine