உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப்பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என தெரிவித்துள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்

wpengine

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் நாளை(01) அழிப்பு…

wpengine

தப்பிச் சென்ற நபருக்கு கொரோனா உறுதி [UPDATE]

wpengine