உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை…



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று(08) ஜா எல, கனேமுல்லை, அங்குருவெல்ல, தம்பகொல்ல, அம்பன்போருவ மற்றும் கொட்டகொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைக்க நடவடிக்கை…

wpengine

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்றார்

wpengine

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு நவம்பர் வரை ஒத்திவைப்பு.

wpengine