உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மன்னார், வவுனியா, அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

உர இறக்குமதிக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

wpengine

தேசிய கல்வியற் கல்லூரியின் 25 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்…

wpengine

04 மணி நேரத்தில் 2564 பேர் கைது…

wpengine