உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு கனமழை – காலநிலை அவதான நிலையம்.


நாட்டின் பல பாகங்களிலும் இன்று(05) இரவு வேளைகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டல அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது சில நேரம் சற்று அதிகரித்து வீசக் கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிகளில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டல அவதான நிலையம் கோரியுள்ளது.

Related posts

யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இந்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை

News Editor

பிரதமரை நீக்குவதாக சுசில் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

wpengine

வெலிக்கடை சிறைச்சாலை இடமாற்றம் குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு.

wpengine