உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில மாகாணங்களில் கடும் மழை…



(FASTNEWS|COLOMBO) நாட்டின் சில மாகாணங்களில் இரவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலை நாட்டில் சில பிரதேசங்களில் கடும் மழை காரணமாக ஹட்டன் நகரின் பிரதான நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

ஹட்டன் – கொழும்பு வீதியின் சில பகுதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளமையினால் 40 நிமிடங்கள் வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரயிலில் மோதி நபரொருவர் மரணம்

Azeem Kilabdeen

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

wpengine

‘குடு ரங்க’ கைது

wpengine