உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா, கிழக்கு, வட மத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, நாட்டின் மேல், வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…

wpengine

அசங்க குருசிங்க’வுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் உயரிய பதவி…

wpengine

நாளை அரச பொது விடுமுறை..

wpengine