உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில இடங்களில் ஓரளவான பலத்த மழைவீழ்ச்சி



(FASTNEWS|COLOMBO)- நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் கடும் காற்றுடன் கூடிய நிலை ஜுலை 24 ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அரச கணக்காய்வு குழுவின் அறிக்கை இன்று பராளுமன்றில்…

wpengine

சீக்குகே உலகிலேயே இரண்டாவது இடத்தில்…

wpengine

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் இன்று மோதுகின்றன…

wpengine