உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினராக ரணில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ரணில் விக்ரமசிங்கவை பெயரிட்ட ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு – காசா இஸ்ரேல் பற்றி பேசியது என்ன..?

wpengine

அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் இலங்கை விஜயம்

wpengine

மியூசியஸ் கல்லூரி கேட்போர்கூட பகுதியில் பாரிய தீ விபத்து.

wpengine