உள்நாட்டு செய்திகள்

நவம்பர் மாதத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிப்பு…


2018 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 44 ஆயிரத்து 556 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் தொடர்பான ஆய்வுப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 28 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வருடத்தின் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதத்தில் பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்தில் 36.3 சதவீதம் என்ற அளவில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் தொடர்பான ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

wpengine

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் விலை 20 ரூபாவால் குறைப்பு..!

wpengine

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு

Azeem Kilabdeen