வணிகம்

தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் கடந்த ஆண்டு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு 2 இலட்சத்து 11 ஆயிரத்து 459 பேர் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2 இலட்சத்து 3 ஆயிரத்து 186ஆக குறைவடைந்துள்ளது.

இதற்கமைய தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையானது 3.9 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

‘எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்’

wpengine

எகிறும் தங்கத்தின் விலை

wpengine

சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு முயற்சி

wpengine