ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தொலைபேசி பாஸ்வேர்டினால் மனைவி கொலை



கையடக்க தொலைபேசியில் பாஸ்வேர்ட் பயன்படுத்தியமையால், பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசியின் பாஸ்வேர்ட் தொடர்பில் கணவன் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் மனைவி அதற்கு வழங்கிய பதிலால் கோபமடைந்த கணவன் அவரை குத்தி கொலை செய்துள்ளார்.

39 வயதுடைய ரேணுகா மல்காந்தி என்ற ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்தை, தாப்பிலிகொட பிரதேசத்தில் சாத்திரம் பார்க்கும் தொழிலில் ஈடுட்ட ரேணுகா மல்காந்தி, தனது கணவர் மற்றும் 12 வயதுடைய மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

எவ்வித பொருளாதார பிரச்சினையும் இன்றி இருவரும் குடும்பத்தை நடத்தி சென்றுள்ளனர். அவரது கணவர் பேக்கரி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதற்காக தயாராக கணவர் அவசரமாக தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொள்வதற்கு மனைவியின் தொலைப்பேசியை கையில் எடுத்துள்ளார்.

எனினும் அந்த தொலைப்பேசியில் பாஸ்வேர்ட் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அவர் மனைவியிடம் வினவியுள்ளார்.

எனினும் மனைவியின் அலட்சியமான பதில் வழங்கியுள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கணவர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ள போதிலும் அருகில் இருந்தவர்களை அதனை தடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சுப் பதவி வழங்கப்படாத முன்னாள் அமைச்சர்கள்

wpengine

வறுமையால் இரண்டு நாட்கள் காத்திருந்த சடலம்!

wpengine

ஜீவனுடன் கெய்ஸ்

wpengine