உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொடரும் பணிப்புறக்கணிப்பால்  ரயில் பயணங்கள் ஆபத்தில்.. பயணிகளுக்கு எச்சரிக்கை..



தொடரும் பணிப்புறக்கணிப்பால்  ரயில் பயணங்கள் ஆபத்தாக மாறியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ரயில் வீதிகளின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு 4 நாட்களுக்கு மேல் கடந்துள்ளமையினால் இதுவரையில் ரயில் வீதியில் எவ்விதமான பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன் காரணமாக ரயில் பயணங்களுக்கு ஆபத்து ஏற்படும் என ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் துமிந்த தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இந்த வீதியில் பணிப்புறக்கணிப்பு காரணமாக பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு 12 ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

##reeshmaa..

Related posts

மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு..!

wpengine

யாழிற்கு முன்னுரிமை; சொந்த பணத்தை முதலிட்ட அமைச்சர் தம்மிக்க

wpengine

ஜனாதிபதியுடன் சேர்ந்து நல்லாட்சிக்கான புதிய அரசைக் கட்டியெழுப்புவேன் – பிரதமர்

wpengine