உள்நாட்டு செய்திகள்

தேர்தல் முடியும் வரை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் நிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் திடீரெனப் பதவி விலக்கப்பட்டதையடுத்து புதிய துணைவேந்தர் பதவிக்காக கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2141/52ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஜனாதிபதித் தேர்தல் காலத்தினுள் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை ஆட்சேபித்து, முன்னாள் துணைவேந்தர் அனுப்பிய கடிதத்துக்கமைவாக நியமன நடைமுறைகளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட மற்றும் புலன் விசாரணைகளுக்கான மேலதிக ஆணையாளரினால் உயர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Related posts

பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகரின் இராஜினாமா வதந்தி என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு…

wpengine

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்

wpengine

மைத்திரி புகைப்பட விளம்பரத்திற்கு கொதித்தெழுந்த ரோஹித்த ராஜபக்ஷ

wpengine