உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் ஜாதிக பலயவில் களமிறங்குகிறாரா மஹிந்த?



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத பட்சத்திலேயே மஹிந்த இவ்வாறு ஸ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கவுள்ளார்.

தேசபிரேமி ஜாதிக பெரமுன என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த கட்சியே ஶ்ரீலங்கா ஜாதிக பலயவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் நெருங்கிய சகாவான பியசிறி விஜேநாயக்காவே இக்கட்சியின் செயலாளராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சாரதிகள், நடத்துனர்கள் மதுபாவனை தொடர்பில் பரிசோதிக்க நடவடிக்கை…

wpengine

“போனி” இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் – பெரும்பாலான மாகாணங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

லண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லை..

wpengine