வணிகம்

தேயிலைத் துறையை மறுசீரமைப்பு செய்ய அரசினால் பொதுத் திட்டம்..



தேயிலைத் துறையை மறுசீரமைப்பு செய்வதற்காக அந்தந்த பெருந்தோட்ட யாக்கங்கள் இணைந்து பொதுத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக வருடாந்தம் 8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சரை, பெருந்தோட்ட யாக்கங்களின் பிரதிநிதிகள் இந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாட தீர்மானித்துள்ளனர்.

தேயிலைத் தோட்டங்களில் உள்ள தேயிலை மரங்கள், 40 வருடங்கள் பலமையானவை. அவற்றை புதிதாக நடுதல், செழுமைப்படுத்தல், தொழிலாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து தெளிவூட்டல் உள்ளிட்ட விடயங்களுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்வதன் ஊடாக தேயிலைத் தொழிற்துறையை மேலும் இலாபகரமானதாக மாற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

பிரான்ஸிற்கான இலங்கை தூதுவராக திலக் ரணவிராஜ நியமனம்…

wpengine

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” – அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

wpengine

இலங்கையின் IT நிறுவனங்களின் தயாரிப்பு கண்காட்சி ஜப்பானில்…

wpengine