உள்நாட்டு செய்திகள்

தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு காற்றுச் சக்தி மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம்


2025ஆம் ஆண்டளவில் தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு காற்றுச் சக்தி மற்றும் சூரிய சக்தி மூலம் 20% மின்சாரத்தை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா கூறினார்.

நேற்று(26)  கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய திட்டமாக இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதாகவும், இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக 2025ஆம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்புக்கு 1000 மெகாவோல்ட் கொள்ளளவு மின்சாரத்தை இணைத்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், இந்த புதிய வேலைத்திட்டத்திற்கு அவசியமான தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை முறையான தொழில்நுட்பத்தில் கீழ் வழங்குவதாகவும் அவர் கூறினார்.

இதனூடாக தேசிய மின் கட்டமைப்பின் மின் உற்பத்திக்கான செலவுகளை மீதப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் செப்ரெம்பர் 06ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்

Related posts

பாபுல், மாவா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு தடை – அமைச்சரவை அனுமதி..

wpengine

அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விலையினை அதிகரிக்க வேண்டாம் – ஜனாதிபதி பணிப்புரை…

wpengine

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது

wpengine