உலக செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | துருக்கி) – துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் நேற்று 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதுடன், பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விழுந்தது.

இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாகவும், 786 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

சிலியின்புதிய ஜனாதிபதியாக செபாஸ்டியன் பினேரா மீண்டும் தேர்வு…

wpengine

அரச ஊழியர்களை குறிவைத்து குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை சுமார் 15

wpengine

சவுதி அரேபியாவிற்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல்

wpengine