உள்நாட்டு செய்திகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு திகதி அறிவிப்பு…



நாடாளாவிய ரீதியில் நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் 20 ஆம் திகதி பரீட்சை முடிவடையும் வரையில் செயலமர்வுகள், பகுதி நேர வகுப்புக்கள், மாநாடுகள் என்பனவற்றை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

இதற்கு முரணாக செயற்படுவோருக்கு எதிராக பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம்தெரிவித்துள்ளதோடு, மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக எவரும் அவதானித்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ முறையிட முடியும் என்றும் அவ்வாறு முறையிடுவதற்கு 119 மற்றும் 1911 போன்ற இலக்கங்களுக்கு தொடர்பையேற்படுத்தி அறிவிக்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

ஜனாதிபதித் தலைமையில் ஆளும் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

wpengine

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது….

wpengine

தனியார் பேரூந்து ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

wpengine