உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கு 1, 2ஆம் திகதிகளில் அவகாசம்…



நாளை(01) மற்றும் நளைமறுதினம்(02) தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார்.

தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தபால் மூல வாக்களிப்பை பதிவு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, தபால் மூல வாக்களிப்பை இதுவரை மேற்கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளைய தினம் அவர்களின் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என்றும், அந்த சந்தர்ப்பம் தவறினால் நாளை மறுதினம் தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தமது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

Related posts

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு மேலும் இறக்குமதி தடை!

wpengine

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் 31 ஆம் திகதி கூடவுள்ளது

wpengine

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலிக்கு

wpengine