கேளிக்கை

தனுஷுக்கு DNA பரிசோதனை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…



நடிகர் தனுஷுக்கு மரபணு பரிசோதனை நடத்தக்கோரி மேலூர் கதிரேசன்-மீனாட்சி தம்பதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஆஜராக கூறி உத்தரவிட்டிருந்தது.

இதன்படி ஆஜரான தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன் அறிக்கை நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷுக்கும், தனக்கும் மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால் தனுஷ் வழக்கு பரபரப்பை கிளப்பியுள்ளது.

Related posts

மம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்…

wpengine

அமலாபால் இரண்டாவது திருமணம்…

wpengine

மாதம் ரூ.15 லட்சம் வாடகை – ஆடம்பர வீட்டிற்கு குடிபோகும் விராட் அனுஷ்கா…

wpengine