உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5000 பேர் கண்காணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5000 பேருக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதுவரை 11,709 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பூசா தனிமைப்படுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட இலங்கை கடற்படையை சேர்ந்த 25 பேர் இன்று அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 84 பேர் பூசா முகாமில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பூசா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட கடற்படை உறுப்பினர்கள் 249 பேர் இதுவரை அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

Related posts

ரஷ்ய உலக பொருளாதார பேரவையில் (டாவோஸ்) பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு!

wpengine

அரசாங்கத்தால் மனமுடைவு – அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் என்கிறார் சனத் நிஷாந்த..!

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன மற்றும் அவரது மனைவுக்கு எதிரான வழக்கு விசாரணை இம்மாத இறுதியில்..

wpengine