உள்நாட்டு செய்திகள்

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்.. – ரிஷாத்..



தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதினை கொலை செய்யும் திட்டம் குறித்து நாமல் குமார வௌியிட்ட குரல் பதிவு தொடர்பில் அண்மையில் அகில இலங்கை மக்கள் சார்பில் பொலிஸ் தெலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை, தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ரிஷாத் பதியுதீன் இன்று(06) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

“.. தன்னை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் செய்தி வௌியாகியுள்ள நிலையிலும் தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுாகப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருப்பதாகவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டும்..” என்று ரிஷாத் பதியுதீன் இதன்போது கூறினார்.

Related posts

சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் விடுமுறை…

wpengine

ரிஷாட் பதியுதீன் தனது வாக்கினை பதிவு செய்தார்

wpengine

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்!

News Editor