உலக செய்திகள்

ட்விட்டர் கணக்குகளை முடக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஆறு மாதமாகப் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை முடக்க தீர்மானித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான காலக்கெடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதிக்குள் பயன்படுத்தப்படாத கணக்குகள் முடக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரின் கொள்கைகள் மாறி உள்ளதுடன், வெகுநாட்களாக ட்விட்டர் கணக்குகளைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள், இந்த கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயலற்ற கணக்குகளை இரத்து செய்வதன் மூலம் ட்விட்டர் மீது ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியுமென அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்

Related posts

மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபடவில்லை – ஆங் சான் சூகி

wpengine

ஜப்பானில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் படுகாயம்

wpengine