உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ் தற்போது நடைமுறையில்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தேசிய பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் தற்போது ஆட்கள் பதிவுத் திணைக்களம் வழங்கி வருகிறது.

ஒகஸ்ட் 1, 2022 க்குப் பின்னர் பிறந்த குழந்தைகள் டிஜிட்டல் வடிவில் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என பதிவாளர் ஜெனரல் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழுக்கான திட்டம் இறுதியில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.

குழந்தை 15 வயதை அடையும் போது, ​​டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக பட்டியலிடப்பட்ட எண் அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பதிவாளர் நாயகத்தின் பிரகாரம்,ஆங்கிலம்-தமிழ் அல்லது சிங்களம்-தமிழ் ஆகிய மொழிகளில் மொழி மாற்றங்களை அனுமதிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

Related posts

இ.போ.தொழிலாளர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை

wpengine

இலங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை..!

wpengine

மண்ணெண்ணெய்க்கான நிவாரணத் தொகை வங்கிக் கணக்கிற்கு…

wpengine