Top Story 1உள்நாட்டு செய்திகள்

டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு..!

நாட்டின் நிலக்கரி இருப்பு இம்மாதம் 31ஆம் திகதி தீர்ந்ததையடுத்து, நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் என்றும், அதன் பின்னர் நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு இருக்கும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இன்று தெரிவித்துள்ளார் .

நாட்டின் மின்சார விநியோகத்தில் 45 வீதமான மின்சாரத்தை நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழங்குகிறது. இங்கு மூன்று இயந்திரங்களும் செயலிழந்தால் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும்.

அதேவேளை நீர்மின் நிலையங்களில் நீர்மட்டம் 75 வீதமாக குறைந்துள்ளதால், அடுத்த சில மாதங்களில் நீர்மின்சாரம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும், இதனால் நாடு இயங்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார் .

Related posts

களனி பாலத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல்…

wpengine

2025 வரவு செலவுத்திட்டம் பெப்ரவரி 17 சமர்ப்பிக்கப்படும்

Azeem Kilabdeen

இன்றும் 698 பேர் பூரண குணம்

wpengine