ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

டவுசர் திருடர்கள் இருவர் சிக்கினர்



ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நீளக்காற்சட்டைகளை திருடிய சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொஸ்கொட ஆடைதொழிற்சாலையில் இருந்தே இந்த நீளக்காற்சட்டைகளை அவர்கள் களவாடியுள்ளனர். மிகுவும் நுட்பமான முறையில் இவர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குப்பைகளை கொண்டு செல்லும் பெட்டிகளில் அடைத்து இவர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். நீளக்காற்சட்டைகளை மறைத்துவைத்த விற்பனை நிலையத்தை சோதனையிட அம்பலாங்கொடை நகரத்துக்கு பொலிஸார் சென்றபோது, சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். எனினும், சந்தேகநபர்களை பொலிஸார் மீண்டும் கைதுசெய்ததுடன் அதன்போது பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. –

Related posts

ITN பதற்ற நிலையினை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிசார் களத்தில்..

wpengine

சில அமைச்சர்களுக்கான விசேட பாதுகாப்பு நீக்கம்…

wpengine

கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்வேன் – பி.ஹரிசன்

wpengine