உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு…



பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற சமயம் சார்ந்த ஊடக சந்திப்பொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

wpengine

சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் “சுமூகமான முடிவுக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவு”- அமைச்சர் ரிசாத் பதியுதீன் 

wpengine