உள்நாட்டு செய்திகள்

ஜா – எலயில் துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் ஆரம்பம்…


ஜா எல – ரத்தொலுகம வீடமைப்பு மைதானத்திற்கு அருகில் நேற்றிரவு(07) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காரொன்றிலிருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், 6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

Related posts

கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் அறிவிப்பு

wpengine

மு.சோ.கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை நாடுகடத்த மாட்டோம் – அரசு..

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களது பிரச்சினைக்கு இன்று(06) பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை…

wpengine