உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால மரணம் எய்துவார் என்பது சாஸ்திர சதியே – ஊடக அமைச்சு..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி மாதத்துக்குள் இயற்கையாக மரணமடைவார் என்றும், அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அத்தேர்தலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெல்வார் என்றும் ஜோதிடரினால் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமையாது, சாஸ்திர சதியாகும் என்று ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியாகியுள்ள ஜோதிடரின், ஜாதகக் கணிப்பின் பின்னணியைக் கண்டறிவதற்காக அது தொடர்பான காணொளி, பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமால் போபகே தெரிவித்துள்ளார்.

சமூக இணையத்தளங்களின் ஊடாக, தொடர்ச்சியாகத் தரவேற்றப்படும் இவ்வாறான காணொளி தொடர்பாக ஆழமாக ஆராய்ந்தால் இதன் உள்நோக்கத்தினை நாம் கண்டறியமுடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த ஜாதக கணிப்பு உண்மைக்கு புறம்பானதாகும். இந்தக் கணிப்பு தொடர்பான ஆவணங்களைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம், இது உண்மைக்குப் புறம்பானது என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக வலைதளங்களில் தரவேற்றப்பட்டுள்ள  விஜித் விஜயமுனி என்ற ஜோதிடரின் அந்த வீடியோவினை வாசகர் கவனத்திற்கு நாம் முன்னரே வழங்கியிருந்தோம்.

காணொளிப்பதிவு இணைக்கப்பட்ட  தமிழ் மொழிபெயர்ப்பினைக் காண கீழுள்ள செய்தியினை  கிளிக் செய்யவும்..

மஹிந்த தோற்பார் எனக்கூறிய ஜோதிடர் ரோஹன, ரணில் மற்றும் கோத்தா ஜனாதிபதி ஆவார் என ஆரூடம்.. (VIDEO)

Related posts

மஹர சிறையில் மோதல் – பலி எண்ணிக்கை உயர்வு

wpengine

நடிகரும் தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை – அறிக்கை வெளியிட்டது வைத்தியசாலை..!

wpengine

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்”

wpengine