உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன’வினால் அமைச்சரவை மறுசீரமைப்பு…



எதிர்வரும் சிங்கள புதுவருடத்தின் பின்னர் அமைச்சரவைக் குழுவில் மறுசீரமைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(27) வடக்கு கிழக்கு மாகாண சபைகளை விடுத்து ஏனைய 7 மாகாண முதலமைச்சர்களையும் சந்தித்த போதே தெரிவித்துள்ளார்.

மேலும், 2012ம் ஆண்டு தேர்தல் இடம்பெற்ற கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான ஆட்சி காலம் இந்த வருடத்துடன் நிறைவடைகின்ற நிலையில், அவற்றுக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என்று ஜனாதிபதி குறித்த சந்திப்பில் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலத்துடன் போட்டியிட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம்..

wpengine

வில்பத்து விவகாரம் குறித்த ரிட் மனுவுக்கான எதிர்ப்பிற்கு கால அவகாசம்

wpengine

மறு அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆரம்பமாகிறது பெற்றோலிய தொழிற்சங்கங்கள்..

wpengine