Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு – 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை..!

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரையோர புகையிரதப் பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்…

wpengine

மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி கைது

wpengine

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

wpengine