உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு திகதி வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இம் மாதம் 15ம் திகதி முதல் அடுத்த மாதம் ஒக்டோபர் 15ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடி வருகின்றனர். அத்துடன், தேவையான ஆவணங்களையும் தயாரித்து வருகின்றனர்.

அத்துடன், 15ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ திகதியை அறிவிக்க முடியும் எனவும் ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து ஆராய தேர்தல்கள் ஆணையம் எதிர்வரும் 9ம் திகதி கூடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது…

wpengine

கமத்தொழில் அமைச்சின் விவசாய பிரிவு பத்தரமுல்லைக்கு

wpengine

கொழும்பில் 18 மணித்தியால நீர் வெட்டு

wpengine