உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகுவதற்கான காரணம் சைட்டம் விவகாரமே.. – GMOA



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்தின் ஓர் கட்டமே ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபயகோன் பதவி விலகுவதற்கான காரணம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(03) குறித்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்ட ஊடக அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலக ஏதுவாக அமைந்தது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

(rizmira)

Related posts

மின்சார சபை ஊழியர்களுக்கு இவ்வருடம் போனஸ் இல்லை

wpengine

நாளை 11 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை…

wpengine

ஜெருசலம் குறித்த அமெரிக்காவின் யோசனை தோல்வியடைந்தது..

wpengine