உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி – சீஷெல்ஸின் உப ஜனாதிபதி சந்திப்பு…


சீஷெல்ஸ் நாட்டிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சீஷெல்ஸின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிடனுக்கும் (Vincent Meriton) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று(09) சீஷெல்ஸின் பிராஸ்லின் தீவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு சீஷெல்ஸ் உப ஜனாதிபதி அமோக வரவேற்பு அளித்தார்.

இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்கள் நிறைவடையும் இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதியின் விஜயம் குறித்து, சீஷெல்ஸின் உப ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கைகளை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் பலமாக முன்நோக்கி கொண்டு செல்ல தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பினை நினைவுகூரும் வகையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

wpengine

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய எரிபொருள் விலைகள் மீண்டும் குறைகிறது…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 707

wpengine