உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கி உயர் நீதிமன்றில் 05 மனுக்கள் தாக்கல்…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தினை கலைக்க எடுத்த தீர்மானமானது அரசியல் அமைப்பிற்கு அமையவே எனவும் இதில் சட்ட மீறல்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்து, பாராளுமன்ற கலைப்பிற்கு ஆதரவாக ஐந்து மனுக்கள் உயர் நீதிமன்றில் இன்று(13) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பிரேமநாத் சீ.தொலவத்த, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் சன்ன ஜயசுமான ஆகியோராலேயே குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் கடந்த 09ம் திகதி நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine

இசுறு உதானவின் விசேட விக்கெட் தடயத்தினால் Rajshahi Kings அபார வெற்றி…

wpengine

சிறுநீரக கடத்தல் விவகாரம் – விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

wpengine