ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கா….?


பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும், இந்த நிலைமை தொடர்ந்தும் இடம்பெற்றால், வரவு செலவுத் திட்டமொன்றையும் முன்னெடுக்க முடியாமல் போகும். நாட்டில் வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைக்காமல் செலவு செய்வது எப்படி ? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த நிலைமையினால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதும் பிரச்சினைக்குரியதாக மாறும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

நேற்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

உத்தமன் என்று எவனுமில்லை அரசியல் என்னும் சதுரங்கப் பலகையில்

wpengine

பிரபு பாதுகாப்பு பிரிவு வாகனங்களுக்குமா 25000 ரூபா அபராதம்?

wpengine

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்தனர்

wpengine