வணிகம்

சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை…



சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக கொள்கை ஒன்றும் நிறுவனம் மற்றும் தொழிநுட்பத்தின் பங்களிப்பு அவசியம் என ஹெக்டர் கொப்பே கடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் சுட்டிகாட்டியுள்ளது.

சமீபகாலத்தில் படைப்புழுவின் தாக்கத்தினால் சோள உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் பிரச்சினைகளும் ஏற்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வறட்சி வலயங்களின் சிறியளவில் சோள உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோரும் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில், இவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதிலும் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியின் போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கடைபிடிப்பதும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் ஹெக்டர் கொப்பே கடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

காற்றினை எரிபொருளாகக் கொண்டு புதிய வகை கார்கள் அறிமுகம்…

wpengine

மலேசியாவின் Success Electronics உடன் Ceyoka உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

கொரிய தொழிற்பயிற்சி நிலையம் இன்று திறந்துவைப்பு

wpengine