உள்நாட்டு செய்திகள்

சைபர் தாக்குதலானது, வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுப்பு



(FASTNEWS|COLOMBO) நாட்டின் இணையத்தளங்கள் மீது இடம்பெற்ற சைபர் தாக்குதலானது, வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுக்கப்பட்டதாக, தகவல்கள் வௌியாகியுள்ளன.

கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலானது ஒரு குழுவினராலும் 19ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலானது மற்றுமொரு வௌிநாட்டுக் குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டதாக, கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளங்களில் 99 வீதமானவை, வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனூடாக எவ்விதத் தரவுகளையும் தாக்குதல்தாரர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும்ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் இணையத்தங்களைப் பாதுகாப்பது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Related posts

காலை 8 மணிக்கெல்லாம் ஆபீஸ் போகிற மாதிரி குரங்குகள் வராது.. இரவு 12 மணிக்கு குரங்குகளை எண்ணுங்கள்..

Azeem Kilabdeen

GPS கருவி பொருத்தாத அரைசொகுசு பேரூந்துகளின் வீதி அனுமதிப் பத்திரங்களை நீடிக்காதிருக்க தீர்மானம்

wpengine

தந்திரோபாய வேலைத்திட்டம் ஆரம்பம்

wpengine