உள்நாட்டு செய்திகள்

சுகாதார வழிகாட்டல்களுடன் பேருந்துகள் சேவையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய பயணிகளுக்காக கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு இன்றைய தினம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

சகல மாகாணங்களிலும் வழமை போன்று பேருந்து சேவைகள் இடம்பெறும்

தொழில் நடவடிக்கைகளுக்கு செல்பவர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் தொடருந்து சேவைகள் இடம்பெறமாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பயணிகளின் நலன்கருதி மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விமான நிலையத்தில் தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

Azeem Kilabdeen

குறைக்கப்பட்ட முச்சக்கரவண்டி கட்டணம் இன்று முதல் அமுல்…

wpengine

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக்குழு நியமித்து விசாரணை மேற்கொள்ளப்படும்…

wpengine