உள்நாட்டு செய்திகள்

சீன பாதுகாப்பு அமைச்சர் சீனாவுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங், சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் (27) நாட்டை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரை நேற்று (28) சந்தித்து பேசினார்.

இந்நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் இன்று காலை 8.55 மணியளவில் சீனா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

அவருடன் 37 பேர் இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அனைவரும் சீன விமான படைக்கு சொந்தமான பீ-4026 என்ற விசேட விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

காலோஸ் ப்ரித்வைட் மற்றும் குமார் சங்கக்கார அவுஸ்திரேலியாவுக்கு

wpengine

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு

wpengine

இலங்கையில் கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டது உறுதி

wpengine