உள்நாட்டு செய்திகள்

சில பகுதிகளுக்கு நீர்விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளை-ஹேகித்த பிரதான நீர்விநியோக குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இன்று அதிகாலை ஹேகித்த, பள்ளியவத்த, எலகந்த, பலகலவத்த ஆகிய பகுதிகளுக்கு நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மேலும், மருதானை வீதி, வெலிஅமுண, எந்தல வீதி மற்றும் எலகந்த வீதியின் நீர் விநியோகத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சேதமடைந்த குழாயை சரிசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

900kg இற்கும் மேற்பட்ட கொக்கைனை அழிக்க தீர்மானம்…

wpengine

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது..

wpengine

தம்புள்ளை பொருளாதார நிலையம் திறப்பு

wpengine