உள்நாட்டு செய்திகள்

சினோபாம் தடுப்பூசிகள் தயார் நிலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளை கப்பலில் ஏற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த தடுப்பூசி தொகை சீன சுங்கப்பிரிவில் சுகாதார பாதுகாப்புடன் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கை நேற்று நிறைவடைந்ததாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு 5 லட்சம் சினோபாம் தடுப்பூசிகளை விரைவாக வழங்குவதற்காக 24 மணிநேர உற்பத்தி சேவைகள் இடம்பெற்றதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 47 ஆயிரத்து 866 பேர் கைது

wpengine

வஸீம் கொலையாளிகளுக்கு அரச உயர்மட்ட அனுசரணை?

wpengine

பேரூந்து கட்டண அதிகரிப்புக்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரம் நாளை…

wpengine