விளையாட்டு

சர்வதேச விளையாட்டு தடை; ரஷ்யா மேன் முறையீடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ரஷ்யா மேல் முறையீடு செய்துள்ளது.

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக், 2022 பீஃபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடைகளை எதிர்த்து ரஷ்யா மேன்முறையீடு செய்துள்ளது.

அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் சார்பில் இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனு சுவிட்சர்லாந்தின் லுசானாவில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்) விரைவில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

FIFA வின் மூத்த அதிகாரிகள் அறுவர் கைது

wpengine

பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 281 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine

இரண்டாவது ஒருநாள் போட்டி – நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி…

wpengine