உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் ஆபத்து!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, நாட்டை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கிறீஸ் நாட்டுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜே.வி.பியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

‘’சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, மீண்டெழுந்த நாடுகள் உலகில் இல்லை. 1998 இல் இருந்து ஆர்ஜன்டீனா 9 தடவைகள் ஐ.எம்.எப்பிடம் கடன் பெற்றுள்ளது.

இந்த 9 தடவைகளும் அந்நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தது. சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று இலங்கை போன்ற சிறிய நாடுகளால் ஒருபோதும் மேலே வரமுடியாது எனவும் கூறினார்.

Related posts

மஹிந்தவை தேர்தலுக்கு அழைத்து வர தங்காலை கார்ல்டனிலிருந்து வாகனத் தொடரணி

wpengine

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான, கடுவலை உள்மாற்றீடு சுற்று மூடப்பட்டது…

wpengine

இலங்கைக்கு இதுவரையில் 31 தங்கப்பதக்கம்

wpengine